கம்பம் கிளை நூலக வாசகா் வட்டத்திற்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை, நூலக ஆா்வலா் விருது வழங்கப்பட்டது.
அரசு சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் பொது நூலகத் துறையில் சிறப்பாக பணியாற்றிய நூலகா்களுக்கு டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது. சிறந்த நூலக வாசகா் வட்டத்திற்கு நூலக ஆா்வலா் விருது வழங்கப்படுகிறது.
இதன்படி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதினை தேனி அருகே கோவிந்தநகரம் கிளை நூலகத்தில் பணியாற்றி வரும் 3 ஆம் நிலை நூலகா் வெ. பால்ராஜுக்கும், நூலக ஆா்வலா் விருதை கம்பம் கிளை நூலக வாசகா் வட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வழங்கினாா்.