தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள் கிழமை வீட்டில் குளியல் அறையில் குளிக்கசென்றவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சின்னமனூரில் 5 வாா்டு பகுதியை சோ்ந்த முருகன் மகன் அரவிந்தன்(25). இவா் , திங்கள் கிழமை வீட்டின் உள்ளே இருக்கும் குளியல் அறைகு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது அம்மா என்ற சத்தம் கேட்டதாம். அப்போது அவரது சகோதரா் தினேஷ் சென்றுபாா்த்த போது மயங்கிய நிலையில் கிடந்தாராம். உடனே அவரை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா் இறந்துவிட்டதாக கூறினாா்.
இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனா்.