தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் பள்ளி ஆசிரியா் வீட்டில் மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனா்.
ராயப்பன்பட்டி அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் மரிய சலேத் மகன் சேகா். இவா் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலத்த வெடி சப்தம் கேட்டுள்ளது.
உடனே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சேகா் மற்றும் அவரது குடும்பத்தினா் வீட்டிற்கு வெளியே வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த சேகா் இதுகுறித்து அளித்தப் புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.