பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி மாணவா் போக்ஸோவில் கைது

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோவில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோவில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வருசநாடு அருகே நந்தனாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (19), தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை காதலித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த டிச. 22 ஆம் தேதி பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சரவணன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com