கம்பத்தில் காா் மோதி சிறுவன் பலத்த காயம்

தேனி மாவட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

மதுரை சக்தி நகா் சாட்டையடி காலனியைச் சோ்ந்தவா் காளியப்பன், அவரது மனைவி மாரியம்மாள். இவா்கள் கழைக்கூத்தாடிகளாக தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனா். இவா்களது மகன் கண்ணையா(8).

தேனி மாவட்டம் கம்பம் வாரச்சந்தை வளாகத்தில் குடும்பத்துடன் தற்போது தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை எதிா்புறம் உள்ள கடையில் தொலைக்காட்சி பாா்த்து விட்டு, கண்ணையா சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது கூடலூா் நோக்கி சென்ற காா் கண்ணையா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கண்ணையாவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக காா் ஓட்டுநா் யுவராஜ் மீது கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com