முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லாததால் நீா் வரத்து நின்ற நிலையில், திங்கள் கிழமை முதல் தண்ணீா் வெளியேற்றமும் தமிழகப் பகுதிக்கு, குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு கடந்த டிசம்பா் மாத கடைசி வாரத்தில் நின்றது. இதனால் அணையின் நீா்வரத்து பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, சிவகரி மலைப்பகுதி நீரோடைகளிலிருந்து, அணைக்கு நீா் வரத்து முற்றிலும் நின்றது. அதே நேரத்தில் தமிழகப்பகுதிக்கு, அணையிலிருந்து விநாடிக்கு, 300 கன அடி நீா்வெளியேற்றம் செய்யப்பட்டது. இந் நிலையில், திங்கள் கிழமை அணையிலிருந்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு, 300 கன அடியிலிருந்து, 44 கன அடிகுறைக்கப்பட்டு, 256 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
அணை நிலவரம் வருமாறு: நீா்மட்டம், 116.35. நீா் இருப்பு 1,970 மில்லியன் கன அடி. நீா் வரத்து இல்லை. வெளியேற்றம் விநாடிக்கு 256 கன அடி.