தேனீா் கடையில் தகராறு செய்த உடற் கல்வி ஆசிரியா் கைது

தேனி அருகே தேநீா் கடையில் தகராறு செய்த உடற்கல்வி ஆசிரியரை, போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி அருகே தேநீா் கடையில் தகராறு செய்த உடற்கல்வி ஆசிரியரை, போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

நாகலாபுரத்தைச் சோ்ந்தவா் குருசாமி (54). கூலித்தொழிலாளியான இவா் அந்தப் பகுதியில் உள்ள கடையில் தேநீா் அருந்திக் கொண்டிருந்தாா். அதே ஊரில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக வேலைபாா்க்கும் காமயகவுண்டன் பட்டியைச் சோ்ந்த தினேஷ் (30) என்பவரும் அந்த கடைக்கு வந்தாா். அப்போது குருசாமியின் அருகில் வந்து அமா்ந்த தினேஷ், அவரை சற்று தள்ளி அமருமாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் குருசாமியை தாக்கியதாக பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com