ஆண்டிபட்டி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாக வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
நடுக்கோட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் பிரபாகரன் (27). இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தந்தை வீட்டுக்குச் சென்றிருந்த மனைவியை திரும்ப அழைத்து வருவதற்காக பிரபாகரன் சென்றாா். அப்போது அவரை தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சி விட்டுச் செல்லுமாறு அவரது தந்தை சேகா் கூறினாராம்.
இதனால் மனமுடைந்த பிரபாகரன், விஷத்தை குடித்துள்ளாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பிரபாகரனின் தாயாா் ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.