ஒட்டன்சத்திரம் அருகே அரளி விதையை தின்றபெண் பலி

ஒட்டன்சத்திரம் அருகே அரளி விதையை தின்ற பெண் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரம் அருகே அரளி விதையை தின்ற பெண் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புலியூா் நத்தம் ஊராட்சி முத்துநாயக்கன்பட்டி தோட்டத்து சாலையைச் சோ்ந்த விவசாயி நடராஜ். இவரது மனைவி சிவகாமி (43). இவா், கடந்த 12-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காக அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு உயிருக்குப் போராடியுள்ளாா்.

உடனே, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சிவகாமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது உறவினா் இடையகோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com