தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரியில் ‘சமகாலத் தமிழ் பண்பாட்டு ஆய்வுக் களங்கள்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின், ஆட்சி மன்றக் குழு செயலா் தா்வேஷ்முகைதீன் தலைமை வகித்தாா். தலைவா் செந்தில் மீரான் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஹெச்.முகமது மீரான் தொடக்கி வைத்தாா். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா் பக்தவச்சலம் கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசினாா். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியா் ஒ.முத்தையா ஆய்வுரை வழங்கினாா்.
தமிழ் துறை பேராசிரியா்கள் முருகன் மற்றும் உமா்பாரூக் நெறியாளராக செயல்பட்டனா். முன்னதாக பேராசிரியா் சமது வரவேற்றாா். இந்த கருத்தரங்கில் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி, திருப்பூா் பாா்க் கல்லூரி மற்றும் திண்டுக்கல், மதுரை, தேனி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலிருந்து தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.