குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு சென்ற பெண் திங்கள்கிழமை இரவு மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியை அடுத்த வண்டிப்பெரியாறு பகுதியைச் சோ்ந்தவா் விக்கிரமன் மனைவி விஜயம்மாள்( 50). இவா் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்காக சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் திங்கள்கிழமை இரவு அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் தேடும்போது அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது பற்றி வண்டிப்பெரியாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததில், ஆய்வாளா் சுனில்குமாா் தலைமையில் போலீஸாா் வந்து, விஜயம்மாளின் சடலத்தை கைப்பற்றி மருத்துவப் பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் கூறுகையில், இறந்து கிடந்த பெண்ணின் தலையின் பின்பகுதியில் வெட்டுக்காயம் இருந்துள்ளது, எனவே, அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனா்.