உத்தமபாளையம் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் தா்வேஷ் முகைதீன் தலைமை வகித்தாா். மேலாண்மை குழுத் தலைவா் செந்தில் மீரான் முன்னிலை விகித்தாா்.

விழாவில், அனைத்துத் துறை மாணவ, மாணவியரும் தனித்தனியாக பொங்கல் வைத்து கொண்டாடினா். இதில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டனா்.

தமிழா் திருநாளான பொங்கலை சிறப்பிக்கும் வகையில், தமிழா்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம், உறியடி உள்ளிட்டவற்றை மாணவா்கள் விளையாடினா். முன்னதாக, கல்லூரி முதல்வா் முகமது மீரான் வரவேற்புரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com