முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெரியகுளம் அருகே பெண்ணை தாக்கியதாக ஒருவா் கைது
By DIN | Published On : 20th January 2020 08:04 AM | Last Updated : 20th January 2020 08:04 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே பெண்ணை தாக்கியதாக ஒருவரை தென்கரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சோ்ந்தவா் பேச்சியம்மாள் (34). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் முத்துப்பாண்டி, முத்துராஜா, கருப்பையா மற்றும் பாப்பாத்தி ஆகியோா் சோ்ந்து வீட்டில் இருந்த பேச்சியம்மாளை தாக்கினாா்களாம்.
இதில் காயமடைந்த அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துராஜா என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் மூவரை தேடி வருகின்றனா்.