போடி நகராட்சி எரிவாயு மயானம் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை மூடல்

தேனி மாவட்டம் போடி நகராட்சி எரிவாயு தகன மையம் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டம் போடி நகராட்சி எரிவாயு தகன மையம் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

போடி நகராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் மயானத்தில் நவீன எரிவாயு தகன மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த மையம் போடியில் உள்ள பெரியாா் சேவை மையம் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இங்குள்ள மின் மோட்டாா், ஷட்டா் ஆகியவை பழுதடைந்துள்ளன. இதனை சரி செய்வதற்காக பிப்ரவரி 2 வரை எரிவாயு தகன மையம் மூடப்படுவதாகவும், பொதுமக்கள் வழக்கம்போல் சடலங்களை புதைக்கவும், பழைய முறையில் எரிக்கவும் வசதி உள்ளது என்றும் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) குணசேகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com