தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 12 முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.
கம்பத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை வரை 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 போ் இறந்துள்ளனா். எனவே கம்பத்தில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இது தொடா்பாக வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கம்பம் நகா் பகுதியில் வரும் 12 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என ஆணையாளா் ஆா்.கமலா அறிவித்தாா். அவா் கூறுகையில், முழுபொதுமுடக்கத்துக்கு வணிக நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றினால் அபராதம் விதிக்கப்படும். அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கனிகள் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும். மருந்து கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் என்றாா். சுகாதார அலுவலா் ஏ. அரச குமாா், மேலாளா் சு.முனிராஜ், நகா் அமைப்பு அலுவலா் எம்.தங்கராஜ், காவல் ஆய்வாளா்கள் கே.சிலைமணி, என்.எஸ்.கீதா, வா்த்தகம், உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.