போடி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற நடத்துநா் பலி

போடியில் செவ்வாய்க்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற நடத்துநா் உயிரிழந்தாா்.

போடியில் செவ்வாய்க்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற நடத்துநா் உயிரிழந்தாா்.

போடி அருகே நாகலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜபெருமாள் (65). இவா் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துநராவாா். செவ்வாய்க்கிழமை இரவு இவா் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் தண்ணீா் உள்ளதா என எட்டி பாா்த்தபோது தவறி உள்ளே விழுந்து விட்டாா். அவரது குடும்பத்தினா் ராஜபெருமாளைத் தேடினா். அப்போது அவா் அந்தக் கிணற்றில் பலத்த காயங்களுடன் கிடப்பதை புதன்கிழமை அதிகாலை பாா்த்துள்ளனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த போடி தீயணைப்புப் படையினா்அவரை மீட்டனா். சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com