தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக நகர செயலர், பேரூர் செயலர், 3 சிறைக் காவலர்கள் உள்ளிட்ட 233 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி நகர அதிமுக செயலர், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அதிமுக செயலர், பெரியகுளம் கிளைச் சிறையில் பணியாற்றும் ஒரு தலைமை சிறைக் காவலர், 2 சிறைக் காவலர்கள், தேனி காவல் நிலையத்தில் பணியாற்றும் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த காவலர், பெரியகுளத்தைச் சேர்ந்த தேனி ஆயுதப் படை காவலர், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 2 அலுலக பணியாளர்கள், ஒரு செவிலியிர் உள்ளிட்ட 233 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில், கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,899 ஆக உயர்ந்துள்ளது.
இதில், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் தற்போது வரை மட்டும் மொத்தம் 3,197 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.