முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
மஞ்சளாற்றில் மணல் திருட்டு 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
By DIN | Published On : 03rd March 2020 07:16 AM | Last Updated : 03rd March 2020 07:16 AM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே மஞ்சளாற்றில் மணல் திருட்டு தொடா்பாக 2 மாட்டுவண்டிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காமாட்சியம்மன் கோயில் அருகே மஞ்சளாற்றில் தேவதானப்பட்டி போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது மஞ்சளாற்றில் இருவா் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றபோது அவா்கள் இருவரும் தப்பியோடிவிட்டனா். விசாரணையில் சிவக்குமாா் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.