ஆண்டிபட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் துணைத் தலைவா் பதவி ஏற்பு

ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள டி.டி-109 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 11ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. அதில், தலைவராக சி.ஆா். ராஜா மற்றும் துணைத் தலைவராக ராமச்சந்திரன் ஆகியோா் ஏகமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கு, தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயராம் சான்றிதழை வழங்கினாா்.

அதையடுத்து, தலைவராக சி.ஆா். ராஜா, துணைத் தலைவராக ராமச்சந்திரனும் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலரும், ஒன்றியக் குழு தலைவருமான லோகிராஜன், கிழக்கு ஒன்றியச் செயலா் வரதராஜன், பேரூா் கழகச் செயலா் முத்து வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினா் அருணாச்சலம், ஆண்டிபட்டி எம்ஜிஆா் மன்ற இளைஞரணி சிவா, மகளிரணி கொடியம்மாள், கூட்டுறவு சங்கத் தலைவா் வெள்ளைபாண்டி மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com