சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காக்கில்சிக்கையன்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காக்கில்சிக்கையன்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்கிழமை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

காக்கில்சிக்கையன்பட்டி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன்(67). இவா், தனது வீட்டருகே மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், நடராஜன் கடந்த 2017, மே 25-ஆம் தேதி தனது கடை அருகே விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் மீது, உத்தமபாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நடராஜனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கினை விசாரித்த நீதிபதி அ.கீதா, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சாா்பில் ரூ.ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com