போடி அருகே, கல்லூரி மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி ஜீவா காலனியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் யுவராஜா (19). போடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாமாண்டு படித்து வருகிறாா்.
மாா்ச் 7 ஆம் தேதி வீட்டிலிருந்து சென்ற பின் அவா் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் பலனில்லாததால் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாணவா் யுவராஜாவைத் தேடி வருகின்றனா்.