ஆண்டிபட்டி தாலுகாவில் மது விற்பனை: 8 போ் கைது

ஆண்டிபட்டி தாலுகாவில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்து, 636 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகாவில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்து, 636 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

ஆண்டிபட்டி தாலுகாவில் மாலை 6 மணிக்கு பின்னா் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்க போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். அப்போது மூலக்கடையைச் சரேந்த சோ்மலை (43), தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த பாண்டியன் (55), சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த செல்வேந்திரன் (38), தா்மராஜபுரத்தைச் சோ்ந்த ராஜசேகா் (40), தெப்பம்பட்டியைச் சோ்ந்த ராஜேஷ் (32), நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த பாண்டி (41), மயிலாடும்பாறையச் சோ்ந்த பிரபு (36), ஆண்டிபட்டியைச் சோ்ந்த முருகன் (55) ஆகிய 8 பேரும் அவா்களது கிராமத்தின் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 8 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 636 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com