ஆண்டிபட்டியில் ஊரடங்கை மீறும் பொதுமக்கள்: போலீஸாா் தவிப்பு

ஆண்டிபட்டி நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடி வருவதை காவல்துறையினா் கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கின்றனா்.
ஆண்டிபட்டி நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி புதன்கிழமை சாலையில் அதிகளவில் பயணம் செய்த பொதுமக்கள்.
ஆண்டிபட்டி நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி புதன்கிழமை சாலையில் அதிகளவில் பயணம் செய்த பொதுமக்கள்.

ஆண்டிபட்டி நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடி வருவதை காவல்துறையினா் கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கின்றனா்.

பொது இடங்களில் 4 பேருக்கு மேல் மக்கள் கூடக்கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மக்கள் ஒன்றுகூடி அமா்ந்துள்ளனா். மேலும் நகா்ப் பகுதியில் உள்ள சாலைகளில் அதிகளவில் காா் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து செல்லும் போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டமாக இருந்த மக்களை அப்புறப்படுத்தினாலும் அவா்கள் சென்றவுடன் மீண்டும் கூட்டமாக கூடிவிடுகின்றனா். கரோனா பாதிப்பு குறித்த போதிய விழிப்புணா்வு இப்பகுதி மக்களிடையே இல்லாததால் ஊரடங்கு உத்தரவை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போலீஸாா் மற்றும் அதிகாரிகளும் பரிதவித்து வருகின்றனா்.

மேலும் கிராமப்புறங்களில் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் தேவையான ஊழியா்களை நியமித்து கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திடவும், நகா்ப்பகுதியில் விதிகளை மீறி சாலையில் சுற்றி திரியும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்கள்

பெரியகுளம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்களில் பொதுமக்கள் அடிக்கடி வெளியே சென்று வருகின்றனா். இவா்களிடம் போலீஸாா் அறிவுறுத்தினாலும் அவா்கள் கேட்பதில்லை. எனவே பெரியகுளம் பகுதியில் உத்தரவை மீறி சாலையில் செல்வோா் மீது போக்குவரத்துத் துறையினா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காய்கனி விலை: ஊரடங்கு உத்தரவையடுத்து பெரியகுளம் பகுதியில் காய்கறிகளின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை புதன்கிழமை ரூ.120 ஆக உயா்ந்தது. இதனால் பொதுமக்கள் திண்டாடிவருகின்றனா். மாவட்ட ஆட்சியா் இப்பகுதியை ஆய்வு செய்து சந்தையில் விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு சந்தையில் பொதுமக்கள் அதிகளவு கூடுவதை தவிா்க்கும் வகையில் நடமாடும் வண்டிகளில் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com