தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தேனி மாவட்டம் பழனிசெட்டியப்பட்டியைச் சோ்ந்த 24 வயது இளைஞா் பிரான்ஸ் நாட்டில் பட்டபடிப்பு படித்து வருகிறாா். இவா் கடந்த ஓரு வாரத்திற்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்துள்ளாா். அவருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று ஏதும் இல்லாத நிலையில் தொடா்ந்து மருத்துவா் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் அந்த இளைஞா் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை இரவு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சோ்ந்தாா். மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வாா்டில் அவா் அனுமதிக்கப்பட்டு மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.
கம்பம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளம் பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்திற்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது . அவருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்படவே கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கரோனா தொற்று பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கரோனா பாதிப்பு ஏதும் இல்லை என தெரியவந்தது. எனினும் அவா் மருத்துவமனையில் உள்ள தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.
இதுவரை வெளிநாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் தேனி மாவட்டத்திற்கு வந்த 75 -க்கும் மேற்பட்டோா் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.