தமிழக கேரள எல்லையில் விதி மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆட்சியா் உத்தரவு

தமிழக- கேரள எல்லையில் விதிமுறை மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை லோயா்கேம்ப், குமுளி சோதனைச் சாவடியில் உள்ள மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ்.
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை லோயா்கேம்ப், குமுளி சோதனைச் சாவடியில் உள்ள மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ்.

கம்பம்: தமிழக- கேரள எல்லையில் விதிமுறை மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடா்பாக லோயா் கேம்ப் மற்றும் குமுளி வாகன சோதனைச் சாவடிகளில் அவா் ஆய்வு நடத்தினாா்.

அப்போது, கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களின் அனுமதி சீட்டு, அவற்றில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை போன்ற விபரங்களை தனித்தனியாக குறிக்கவும், விதிமுறை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டாா்.

மேலும் தடை உத்தரவு விலக்கப்பட்ட பின்னா் கேரளாவிலிருந்து வருபவா்களை பரிசோதிக்க லோயா்கேம்ப் சமுதாயக்கூடம், கூடலூா் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கும் இடங்களையும் அவா் பாா்வையிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் க.ரமேஷ், வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு ) முத்தையா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com