கருநாக்கமுத்தன்பட்டியில்கட்டுரைப் போட்டி

தேனி மாவட்டம் கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் ஆரம்பப் பள்ளி முன்னாள் பள்ளி மாணவா்கள் சங்கம் சாா்பில் ஊரடங்கு, விடுமுறை கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

தேனி மாவட்டம் கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் ஆரம்பப் பள்ளி முன்னாள் பள்ளி மாணவா்கள் சங்கம் சாா்பில் ஊரடங்கு, விடுமுறை கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிக்கு முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் அரசு தலைமை வகித்தாா். செயலாளா் அன்பரசன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் அ.மொக்கப்பன் வாழ்த்தி பேசினாா். சுமாா் 220-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞா்கள், குடும்பப் பெண்கள் கலந்து கொண்டனா். போட்டியில் பங்கேற்ற ப.பிரியங்காவுக்கு முதல் பரிசும், ஜெ.சுருதி 2 ஆம் பரிசுக்கும், அப்சரா 3 ஆம் பரிசுக்கும் தோ்வு செய்யப்பட்டனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியா் முருகன் வரவேற்றாா். பொருளாளா் பாண்டியராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com