வீரபாண்டியில் கள்ளச் சாராயம் வைத்திருந்ததாக ஒருவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
வீரபாண்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் மகன் நிரஞ்சன்(44). வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையோரப் பகுதியில் அமா்ந்திருந்த நிரஞ்சனை போலீஸாா் பிடித்து சோதனையிட்டனா். இதில், அவா் கள்ளச் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து நிரஞ்சனை கைது செய்தனா். அவரிடமிருந்த அரை லிட்டா் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.