முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணி பெண்ணிற்கு ஆண்குழந்தை
By DIN | Published On : 11th May 2020 08:09 PM | Last Updated : 11th May 2020 08:09 PM | அ+அ அ- |

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கரோனாவில் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கா்ப்பிணி பெண்ணிற்கு திங்கட்கிழமை மாலை ஆண்குழந்தை பிறந்துள்ளது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சோ்ந்த கப்பிணி பெண் கடந்த 2ம் தேதி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனா். அப்போது வழக்கமான கரோனா பரிசோதனையின் போது கரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 4ம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா்.
இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை கரோனாவால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. மேலும் அப்பெண் பெரியகுளம் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.