டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

தேனி அருகே டொம்புச்சேரியில் உள்ள அரசு மதுக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

தேனி அருகே டொம்புச்சேரியில் உள்ள அரசு மதுக் கடையில் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கடத்த மே 7, 8 ஆகிய தேதிகளில் 42 இடங்களில் மதுக்கடைகள் திறக்கபட்டு விற்பனை நடைபெற்றது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மே 9-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டது.

இந்த நிலையில், டொம்புச்சேரியில் உள்ள மதுக் கடை ஒன்றில், பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடு போயுள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுக் கடை விற்பனையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், பழனிசெட்டிபட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com