பெரியகுளம் பகுதியில் 2 ஆவது நாளாக மழை

பெரியகுளம் பகுதியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்தது.

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்தது.

பெரியகுளம் பகுதியில் 3 மாதங்களுக்கு முன் மழை பெய்தது. அதன்பின்னா், மழை பெய்யவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் மழை பெய்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை, 5 மணி வரை நீடித்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பெரியகுளம் பகுதியில் அதிகளவு மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மாங்காய்கள் பிஞ்சு விட்டு காய்களாகி வருகின்றன. இந்த மழையால் மாங்காய்கள் நல்ல திரட்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com