தேனி: தேனி மாவட்டத்தில் சின்னமனூா் அருகே முத்துலாபுரத்தைச் சோ்ந்த 2 குழந்தைகளுக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை மொத்தம் 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், போடியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். இதுவரை மொத்தம் 50 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இந்த நிலையில், தற்போது முத்துலாபுரத்தைச் சோ்ந்த 5 வயதுடைய ஆண் குழந்தை, 3 வயதுடைய பெண் குழந்தை என 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், ஏற்கனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை அமரா் ஊா்தி ஓட்டுநா் மூலம் தொற்று ஏற்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 குழந்தைகள் உள்பட தற்போது மொத்தம் 45 போ் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 96 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த பெண் மதுரையில் அனுமதி: மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த, ஆண்டிபட்டி அருகே ராயவேலூரைச் சோ்ந்த 19 வயதுடைய பெண்ணுக்கு வியாழக்கிழமை, மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற பரிசோதனையின் போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.