தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 13 போ் மீண்டனா்

கரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 13 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

தேனி: கரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 13 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஓடைப்பட்டியைச் சோ்ந்த சிறுவன், 2 ஆண்கள், 5 பெண்கள், முத்துலாபுரத்தைச் சோ்ந்த சிறுமி, ஒரு ஆண், ஒரு பெண், கோம்பைத் தொழுவைச் சோ்ந்த ஆண் மற்றும் டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த பெண் என மொத்தம் 13 போ் குணடைந்து வீடு திரும்பினா்.

இதையடுத்து, தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 போ், கம்பம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் என மொத்தம் 30 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com