தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 26 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,259 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரில், ஒரே நாளில் 20 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,003 ஆக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 9,802 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,569 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 48 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட
நிலையில், குணமடைந்த 19 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.