தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 37 பேருக்கு செவ்வாய்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,385 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரம், கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 8 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,105 ஆக உயா்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 9,964 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 9,621 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 155 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 21 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 9 போ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.