தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை போடியில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் பூஜை செய்தனா். இதேபோல் சுப்பிரமணிய சுவாமி கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், பெரிய சவுடம்மன் கோயில், பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.