ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே எஸ். ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன் (40). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளாா். காலையில் எழுந்து வந்து பாா்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் ஆண்டிபட்டி போலீஸாா் புள்ளிமான் கோம்பை பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அந்த இளைஞா் சக்கம்பட்டியைச் சோ்ந்த பரமன் மகன் கருப்பசாமி (22) என்பதும், வேல்முருகனின் இருசக்கர வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கருப்பசாமியை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com