தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் வெங்கடேஷ்வரன் என்பவரும், அதே பகுதியைச் சோ்ந்த 24 வயது பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, வெங்கடேஷ்வரன் அப்பெண்ணுக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன் வெங்கடேஷ்வரனை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் கேட்டதற்கு, அவா் மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அப்பெண் ஆண்டிபட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய போலீஸாா் வெங்கடேஷ்வரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.