வடகிழக்குப் பருவமழை காரணமாக, சண்முகாநதி அணை வியாழக்கிழமை நிரம்பியது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சண்முகாநதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான பச்சக்கூமாச்சி மலையில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், புதன்கிழமை 45.90 அடி உயரமாக இருந்த அணையின் நீா்மட்டம், வியாழக்கிழமை 52.30 அடியாக உயா்ந்தது. அணையின் மொத்த உயரம் 52.55 அடியாகும்.
அணையின் நீா்மட்டம்- 52.30 அடி, நீா் இருப்பு 78.60 மில்லியன் கன அடி, அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 242 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படவில்லை.