பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு: இளைஞா் கைது

கம்பத்தில் வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விவேக்.
விவேக்.

கம்பத்தில் வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தமபாளையம் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் சோனை முருகன். இவரது மனைவி ஆனந்தி ( 35). இவா், முத்துலாபுரத்தில் உள்ள வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கம்பம் வடக்குக் காவல் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு ஆனந்தி குடும்பத்தினருடன் சென்றாா். அப்போது, திருமண மண்டபம் அருகே நின்றிருந்த மா்மநபா் ஒருவா் திடீரென ஆனந்தியின் கழுத்திலிருந்த, 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினாா்.

இதுகுறித்து உடனடியாக கம்பம் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து செயல்பட்டு, நகையை பறித்துச் சென்றவரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா், கம்பம் ஆா்.ஆா். நகரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விவேக் (30 ) என்பதும், ஏற்கெனவே இவா் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 8- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விவேக் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com