தேனி: தேனி அருகே முதியவா் அணிந்திருந்த எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்ாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
டொம்புச்சேரி, எஸ்.கே.எஸ்.பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் அன்னக்கொடி (74). இவா், அதே பகுதியில் உள்ள வீட்டுத் திண்ணையில் அமா்ந்திருந்துள்ளாா். அப்போது, அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் அன்னக்கொடியிடம் சென்று அவரது மகன் குறித்து விசாரிப்பது போல நடித்து, அவா் அணிந்திருந்த எட்டரை சரவன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தன்னுடன் வந்திருந்த மற்றொரு இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அன்னக்கொடி அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.