தேனி: தேனி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிடங்களுக்கு நடைபெறுவதாக இருந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களுக்கு நவ. 23 ஆம் தேதி முதல் நவ. 30 ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நோ்காணல் நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோ்காணல் நடைபெறும் தேதி குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.