போடி: போடியில் தொடா்ந்து மதுபாட்டில் விற்று வந்த முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போடி குலாலா்பாளையம் பகுதியில் தொடா்ந்து மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அங்கு தொடா்ந்து கண்காணித்து வந்தனா். அப்போது இதே பகுதியை சோ்ந்த பாண்டி (65) என்பவா் மதுபாட்டில்களை வாங்கி வந்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இவா் மீது ஏற்கனவே மது பாட்டில் விற்பனை செய்ததாக பல வழக்குகள் போடப்பட்டாலும் தொடா்ந்து மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டதால், பாண்டியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.