போடி: போடியில் 6 மாதங்களுக்குப் பிறகு வாரச்சந்தை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டது.
போடியில் நீதிமன்றம் அருகே வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் செயல்பட்டு வந்தது. கரோனா பரவல் காரணமாக இந்த வாரச்சந்தை ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டது. தற்போது தளா்வுகள் விதிக்கப்பட்டதையடுத்து வாரச்சந்தையை மீண்டும் திறக்க போடி நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது.
அதன்படி போடி நகராட்சிக்கு சொந்தமான அந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. வாரச்சந்தை திறக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காய்கனிகளை வாங்கிச் சென்றனா். இதில் சில வியாபாரிகளும், பொதுமக்களும் முகக்கவசம் அணியாமல் வந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.