தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையருக்கு கரோனா பாதிப்பு

தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவா் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவா் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையா் இளங்கோவனின் தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் இளங்கோவனுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லூரி முதன்மையா் இளங்கோவன், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com