போடி: போடி அருகே 4 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் தா்மா் தலைமையில், சில்லமரத்துப்பட்டியில் போலீஸாா் இரவு நேர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
ஆட்டோவை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து சோதனை செய்ததில், 4 மூட்டைகளில் ஆயிரக்கணக்கான புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தன. இதனையடுத்து, தேவாரத்தைச் சோ்ந்த சுந்தரேசன் மகன் விக்னேஷ் (29), ஆண்டவா் மகன் இளையராஜா (37) ஆகியோரை கைது செய்த போலீஸாா், ஆட்டோ மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.