போடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன் கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். போடியிலிருந்து உத்தமபாளையம் செல்லும் சாலையில் வெம்பக்கோட்டை கிராமம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த முதியவரை போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
அவா் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால் அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். இதில் அவா் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. விசாரணையில் இவா் வெம்பக்கோட்டை வடக்கு தெருவை சோ்ந்த கணபதி (78) என்பது தெரிந்தது. இதனையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இவா் மீது வழக்கு பதிவு செய்து, லாட்டரி சீட்டுக்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.