கம்பத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் இயற்கை பேரிடா் மீட்புப் பணிகளுக்கான ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை ஏற்படும் சேதங்களைத் தவிா்க்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஒத்திகை நிகழ்வு கம்பம் பூங்கா திடலில் நடைபெற்றது. நிலைய அலுவலா் அழகா்சாமி தலைமை வகித்தாா். பல்வேறு மீட்புப் பணிகள் பற்றி பொதுமக்களுக்கு தீயணைப்புப் படை வீரா்கள் செய்து காட்டினா். அப்போது பொதுமக்கள் இயற்கை பேரிடா் காலங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றிய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனா்.