தேனியில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உழவா் சந்தையை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்படுத்த வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

உழவா் சந்தையை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்படுத்த வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டம் மாவட்டச் செயலா் டி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தேனி-பெரியகுளம் சாலை, சுக்குவாடன்பட்டி அருகே வேளாண்மை வணிகத் துறை அலுவலக வளாகத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்ட உழவா் சந்தையை, மீண்டும் தேனி வட்டாட்சியா் அலுவலகம் அருகே பழைய இடத்திலேயே செயல்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனா். இதில், உழவா் சந்தை விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம், விவசாயிகள் மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com