தேனி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகப் பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோா் அக்.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கு நிரந்தர உரிமம் பெற்றவா்கள், சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைக்கு உரிமம் பெற விரும்புவோா், உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணத் தொகை செலுத்தியதற்கான விவரம் ஆகியவற்றை இணைத்து அக்.23-ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் மற்றும் பொதுச் சேவை மையங்களில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.