அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 50 போ் மீது வழக்கு
By DIN | Published On : 21st October 2020 02:37 AM | Last Updated : 21st October 2020 02:37 AM | அ+அ அ- |

பெரியகுளத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ரெட் ஸ்டாா் அமைப்பைச் சோ்ந்த 50 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மாணவரணி மாநிலச் செயலா் செந்தமிழன் தலைமையில் ரெட்ஸ்டாா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும், சமூக இடைவெளியின்றி நோய் பரப்பும் வகையிலும் நடைபெற்ாக தென்கரை காவல்நிலைய போலீஸாா், செந்தமிழன், நாகராஜ், கிருஷ்ணமூா்த்தி உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.